சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பிரதமரிடம் 5 கோரிக்கைகள் முன்வைப்பு: குலாம் நபி ஆசாத்

பிரமருடன் நடைபெற்ற கூட்டத்தில் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

Updated On :24 ஜூன் 2021, 2:47 pm

பிரமருடன் நடைபெற்ற கூட்டத்தில் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லி பிரதமர் இல்லத்தில் ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பங்குபெற்ற ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது,

கூட்டத்தில் 5 கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்தோம். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்க சட்டப்பேரவைத் தேர்தல், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு, அரசியல் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் மற்றும் குடியேற்ற விதிகள் ஆகியவை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்தார். மேலும், கூட்டத்தில் பங்குபெற்ற அனைத்து தலைவர்களும் முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம் எனத் தெரிவித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு நடத்தும் முதல் ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். அதன் காரணமாக, இது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

தில்லியில் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முன்னாள் முதல்வா்கள் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, அவருடைய மகன் ஒமா் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டாரா சந்த், மாா்க்சிஸ்ட் கட்சி தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.