மணிப்பூர் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அபாய ஒலி கேட்கிறது: மேகாலயத்தில் ஒரே மாதத்தில் கரோனாவுக்கு 13 குழந்தைகள் பலி

மேகாலய மாநிலத்தில் கரோனா பாதித்த குழந்தைகள் அதிகளவில் மரணமடைவது, அந்த மாநில அரசுக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

News image

அபாய ஒலி கேட்கிறது: மேகாலயத்தில் ஒரே மாதத்தில் கரோனாவுக்கு 13 குழந்தைகள் பலி

Updated On :17 ஜூன் 2021, 10:57 am


குவகாத்தி: மேகாலய மாநிலத்தில் கரோனா பாதித்த குழந்தைகள் அதிகளவில் மரணமடைவது, அந்த மாநில அரசுக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த மாநிலத்தின் கரோனா புள்ளி விவரங்கள் கூறுவது என்னவென்றால், கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காலம் தொடங்கியது முதல் இதுவரை 0 - 14 வயதுடைய 5,101 குழந்தைகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4,344 பேர் குணமடைந்துவிட்டனர். 17 குழந்தைகள் பலியாகிவிட்டனர். இவர்களில் 13 குழந்தைகள் கடந்த ஒரே மாதத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மே 15-ஆம் தேதி முதல் 2,950 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களில் 2,821 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்ற நிபுணர்களின் எச்சரிக்கையை மாநில அரசுகள் எந்த வகையிலும் புறந்தள்ளிவிட முடியாது என்பதற்கு சான்றாக இந்த புள்ளி விவரங்கள் அமைந்துள்ளன.

இதையடுத்து, மூன்றாவது கரோனா அலைக்கு தயாராகும் வகையில், மேகாலயத்தில் மூன்று குழந்தைகள் மருத்துவமனை அமைக்கப்படுவதாகவும், எந்தவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஏஎல் ஹேக் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.