சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நாட்டில் கரோனா நிலவரம்: சில முக்கிய விவரங்கள்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,471 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
நாட்டில் கரோனா நிலவரம்: சில முக்கிய விவரங்கள்
Updated On :28 ஜனவரி 2024, 3:24 am

ANI

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,471 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 75 நாள்களுக்குப் பிறகு பதிவாகம் குறைந்த பாதிப்பு அளவாகும்.

நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்த 2,726 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 1.17 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்த புள்ளி விவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 60,471 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,95,70,881 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, குணமடைவோர் விகிதம் 95.64 சதவீதமாகவும், கரோனா உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 4.39 சதவீதமாகவும் உள்ளது.

மேலும் 1,17,525 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,82,80,472 ஆக உயர்ந்துள்ளது. 2726 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 9,13,378 பேர் நோய்த் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுவரை மொத்தம் 25,90,44,072 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.