மும்பை: கரோனா தொற்றுப் பரவல் குறைந்திருந்தாலும், கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக, மும்பை மாநகராட்சியில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரத்தின் உள்கட்டமைப்பு, மக்கள் நெரிசல், கனமழை எச்சரிக்கை மற்றும் புறநகர் ரயில்களை அதிக மக்கள் பயன்படுத்துவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு பொதுமுடக்கத்தை நீட்டிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மும்பையில் தற்போது கரோனா தொற்றுப் பரவல் நிலைமை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாரந்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 4.4 சதவீதமாக உள்ளது, தற்போது மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 27.12 சதவீத படுக்கைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், மும்பையில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்படாது, தொடர்ந்து மூன்றாம் நிலை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்திலேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகராஜா் 259-ஆவது ஜெயந்தி விழா

வெயில் தாக்கம்: கடலூரில் நுங்கு விற்பனை மும்முரம்! கடந்தாண்டைவிட விலை அதிகம்

வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


