பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாரம்பரிய சின்னமாக மாறவிருக்கும் பழைய ஜம்மு ரயில் நிலையம்

ஜம்மு நகரின் மிக முக்கியப் பகுதியான விக்ரம் சௌக் அருகே அமைந்திருக்கும் பழைய ஜம்மு ரயில் நிலையம் பாரம்பரிய சின்னமாக மாற்றப்பட உள்ளது.

News image

பாரம்பரிய சின்னமாக மாறவிருக்கும் பழைய ஜம்மு ரயில் நிலையம்

Updated On :8 ஜூன் 2021, 11:12 am


ஜம்மு:  ஜம்மு நகரின் மிக முக்கியப் பகுதியான விக்ரம் சௌக் அருகே அமைந்திருக்கும் பழைய ஜம்மு ரயில் நிலையம் பாரம்பரிய சின்னமாக மாற்றப்பட உள்ளது.

பொலிவுறு நகர திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் வகையில், விக்ரம் சௌக் ரயில் நிலையத்தை, பாரம்பரிய சின்னமாக மாற்றி சுற்றுலாத் தலமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மண்டல ஆணையர் தெரிவித்துள்ளார்.

1897ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஜம்மு ரயில் நிலையம், பல்வேறு காலக்கட்டத்துக்குப் பிறகு பயன்பாட்டில் இல்லாமல் போனது. இதையடுத்து, தற்போதிருக்கும் இந்த பழைய ரயில் நிலையத்தின் கட்டுமானங்களை அப்படியே சீரமைத்து புராதனச் சின்னமாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக, இந்த ரயில் நிலையத்தின் பழைய புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டு, அதனை அப்படியே மீண்டும் உருவாக்க நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.