/

புதுவையில் கரோனா பாதிப்பு மீண்டும் 500-ஐத் தாண்டியது

புதுவையில் 53 நாள்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 500-க்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 545 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

News image

புதுவையில் கரோனா பாதிப்பு மீண்டும் 500-ஐத் தாண்டியது

Updated On :8 ஜூன் 2021, 8:56 am

புதுச்சேரி: புதுவையில் 53 நாள்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 500-க்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 545 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

அதே வேளையில், கரோனாவுக்கு பலியானோர் எணணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 400 பேருக்கும், காரைக்காலில் 112 பேருக்கும், ஏனாமில் 24 பேருக்கும், மாஹேயில் 9 பேருக்கும் என 545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.10 லட்சமாக உயா்ந்தது.

மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோா் என மொத்தம் 7,147 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, புதுச்சேரியில் 6 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,644- ஆக அதிகரித்தது. 938  போ் செவ்வாய்க்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 

புதுவையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை படிப்படியாகக் குறைந்து வருவதால் பொதுமுடக்கத்தில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15- ஆம் தேதி 413 போ் தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதன் பிறகு தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. புதிய உச்சமாக மே 11- ஆம் தேதி 2,049 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதுவையில் 53 நாள்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் கரோனா தொற்று பாதிப்பு நேற்று 500-க்கு கீழ் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் 500-ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.