/

கரோனாவுக்கு பலியான மருத்துவர்கள் எண்ணிக்கை கர்நாடகத்தில் குறைவு

நாட்டிலேயே, கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் மாநிலமாக கர்நாடகம் விளங்குவதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

News image

கரோனாவுக்கு பலியான மருத்துவர்கள் எண்ணிக்கை கர்நாடகத்தில் குறைவு

Updated On :8 ஜூன் 2021, 9:28 am


நாட்டிலேயே, கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் மாநிலமாக கர்நாடகம் விளங்குவதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கடந்த மே மாதம் தீவிரமடைந்த நிலையில், கர்நாடகத்தில்தான் கரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. இங்கு 9 மருத்துவர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இது குறித்து சுதாகர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கரோனா பணியில் ஈடுபட்ட 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதில் கர்நாடகத்தில் மட்டும் 9 மருத்துவர்கள்தான் பலியாகியுள்ளனர். 

கரோனா முன்களப் பணியாளர்களைக் காக்க கர்நாடக அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகள் காரணமாகவே இது நடந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.