பிகாரில் ஜூன் 14 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள்
பிகாரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கத்தில் வரும் 14-ஆம் தேதி முதல் தளர்வுகள் நடைமுறைக்கு வருகிறது.


பாட்னா: பிகாரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கத்தில் வரும் 14-ஆம் தேதி முதல் தளர்வுகள் நடைமுறைக்கு வருகிறது.
அந்த வகையில் ஜூன் 14 முதல், பிகாரில் உள்ள சந்தைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தைகள் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில்லறை, தனியார் மற்றும் அரசுத் துறைகளுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இரவு நேர பொதுமுடக்கம் இரவு 7 முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...