தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 முதல் 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கியது.
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. பரிசோதனைக்கு தேர்வானர்களுக்கு முழு பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவு வந்ததும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எய்ம்ஸ் பேராசிரியர் மருத்துவர் சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். இதற்காக 525 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கும் கரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு பொருந்துகிறதா என்று பரிசோதிக்கும் சோதனை ஏற்கனவே பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கிவிட்டது.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், மூன்றாம் அலைக்கும் வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் தொடங்கியுள்ளன. பாட்னாவின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி பரிசோதனையை கடந்த வாரம் தொடங்கியது. முதற்கட்டமாக 12-18 வயதினருக்கு சோதனைகளைத் தொடங்கியுள்ளது. இந்த சோதனைக்குப் பின்னர் 6-12, 2-6 வயதினருக்கு சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது.
முன்னதாக பாரத் பயோடெக்கின் கரோனா தடுப்பூசியான கோவக்சினை குழந்தைகளுக்கு பரிசோதிக்க கடந்த மே 12 ஆம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


