/

மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி சான்றிதழில் மம்தா புகைப்படம்

மேற்கு வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

News image

மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பூசி சான்றிதழில் மம்தா புகைப்படம்

Updated On :5 ஜூன் 2021, 12:39 pm


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து மாநில அரசே சொந்த நிதியைக் கொண்டு தடுப்பூசிகளை வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் நிலையில், தற்போது வங்கத்தில் 18 - 44 வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் முதல்வர் மம்தா பானர்ஜியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.