/

குஜராத்தில் ஜூன் 7 முதல் 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி

குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜூன் 7 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

News image

குஜராத்தில் ஜூன் 7 முதல் 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி

Updated On :4 ஜூன் 2021, 11:11 am


ஆமதாபாத்: கரோனா பெருந்தொற்று பரவலின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜூன் 7 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்களும் ஜூன் 5ஆம் தேதி சனிக்கிழமையும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் முதல் குஜராத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது கரோனா பாதிப்பு குஜராத்தில் குறைந்து வருவதையடுத்து இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.