பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தடுப்பூசி போடவில்லையெனில் சம்பளம் இல்லை: அரசு ஊழியர்களுக்கு உ.பி. அதிரடி

கரோனா தடுப்பூசியை ஊக்குவிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லையெனில், சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று கூறியுள்ளது.

News image

தடுப்பூசி போடவில்லையெனில் சம்பளம் இல்லை: அரசு ஊழியர்களுக்கு உ.பி. அதிரடி

Updated On :2 ஜூன் 2021, 7:31 am

கரோனா தடுப்பூசியை ஊக்குவிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லையெனில், சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்று கூறியுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மத்திய அரசும் அந்தந்த மாநில அரசும் வலியுறுத்தி வருகின்றன. வாய்ப்பிருந்தும் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சம்பளம் பிடித்தம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. 

அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக தலைமை மேம்பாட்டு அதிகாரி சார்ச்சிட் கௌர் கூறுகையில், 

ஊழியர்கள் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாவிட்டால், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மே மாதத்திற்கான அவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி சந்திர விஜய் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் பிற துறைத் தலைவர்களுக்கு இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு பட்டியலை உருவாக்கி தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

ஊழியர்களின் சம்பளம் நிறுத்தப்படலாம் என்ற அச்சத்தில் தடுப்பூசி போட முன்வருவதாகத் தலைமை மேம்பாட்டு அதிகாரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.