புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்தார்.

News image

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு

Updated On :29 ஜூலை 2021, 6:12 am

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடர்ந்து 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்தார்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 8வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அவை ஒத்திவைக்கப்பட்டவுடன் இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரஹலாத் ஜோஷி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, நாடாளுமன்ற கூட்டத்தை அமைதியாக நடத்தவும் மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் தரப்பிலிருந்து பெகாஸஸ் பிரச்சினை, பணவீக்கம் மற்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.