புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பெட்ரோல் விலை உயர்வு: நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த காங். எம்.பி.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா வியாழக்கிழமை சைக்கிளில் வந்தார்.

News image

நாடாளுமன்றக் கூட்டத்திற்கு சைக்கிளில் வந்த காங். எம்.பி.

Updated On :29 ஜூலை 2021, 7:49 am

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா வியாழக்கிழமை சைக்கிளில் வந்தார்.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | கேரளத்தில் சனி, ஞாயிறுகளில் முழுப் பொதுமுடக்கம்

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டத்திற்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரிபுன் போரா, பெட்ரோல் விலை உயர்விற்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் சைக்கிளில் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடன் பேசிய அவர், “பெட்ரோல் மற்றும் பிற பொருள்களின் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வேறு எங்கு விவாதிப்பது?” எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.