புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு பிரதமர் வாழ்த்து

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image

பிரதமா் நரேந்திர மோடி

Updated On :28 ஜூலை 2021, 7:12 am

கர்நாடகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள்கிழமை எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், பாஜக பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பசவராஜ் பொம்மைக்கு சுட்டுரையில் வாழ்த்து தெரிவித்த மோடி, “கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்துக்கள். அவரின் அனுபவமுள்ள நிர்வாக திறனால், மாநிலத்தில் சிறப்பான பணிகளை மேற்கொள்வார் என்று நான் நம்புகிறேன்” என்றார். 

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசுப் பொறுப்புகளில் வாய்ப்பு அளிப்பதில்லை என்ற பாஜகவின் விதிமுறையை ஏற்று, கட்சி மேலிடத்தின் விருப்பத்துக்கு இணங்க கர்நாடக மாநில முதல்வர் பதவியை பி.எஸ்.எடியூரப்பா (78) திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து, பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழுவின் புதிய தலைவராக பசவராஜ் பொம்மை (61) ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.