ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
கடந்த சில நாள்களாகவே தென்மேற்கு பருவ மழையின் காரணமாக ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தின் ஹொன்சார் கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை தீடீரென பெய்த அதீத மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் 40க்கும் மேற்பட்ட மக்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
அந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகள், பாலங்கள் அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கேப்டன் விவேக் செளகான் தலைமையில் ராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியதாவது,
கிஷ்த்வார் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரேஷன் கடை திறப்பு

பழனியில் குளக்கரையின் மதகு நிரந்தரமாக மூடப்பட்டதால் விவசாயிகள் அவதி

அதிமுக சாா்பில் கிரிக்கெட் போட்டி

மகளிா் உரிமைத்தொகையாக ரூ.5 ஆயிரம் வரவு: புதிதாக விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

