புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

22 மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு: சுகாதாரத்துறை

நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால்

Updated On :27 ஜூலை 2021, 11:39 am

நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. தற்போதை கரோனா பரவல் குறித்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கினார்கள்.

“நாட்டில் 7 மாநிலங்களில் 22 மாவட்டங்களில் கடந்த 4 வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில் கேரளத்தில் 7, மணிப்பூரில் 5, மேகாலாயாவில் 3 மாவட்டங்கள் அடங்கும்.  

மேலும், 62 மாவட்டங்களில் மட்டுமே நாள்தோறும் 100 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பின் வார சராசரி தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், கடந்த வாரங்களில் குறைந்த விகிதத்தை ஒப்பிடும்போது சற்று மெதுவாகவே குறைந்து வருகின்றது. இதுகுறித்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.