திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

விவசாயிகள் குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை: ஹர்சிம்ரத் கெளர்

விவசாயிகள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு கவலையில்லை என சிரோமணி அகாலி தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

News image

விவசாயிகள் குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை: ஹர்சிம்ரத் கெளர்

Updated On :20 ஜூலை 2021, 6:25 am

விவசாயிகள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு கவலையில்லை என சிரோமணி அகாலி தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று பிற்பகல் வரை நாடாளுமன்றத்திம் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே விவசாயிகள் போராட்டம் குறித்த பதாகைகளுடன் சிரோமணி அகாலி தளத்தின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது ஹர்சிம்ரத் கெளர் பேசியதாவது,

மக்களவையில் விவசாயிகள் பிரச்னை தவிர மற்ற அனைத்து பிரச்னைகளையும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று எழுப்பினர். விவசாயிகள் குறித்த கவலை அவர்களுக்கு இல்லை. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இரு கட்சிகளும் வேளாண் சட்டம் அமல்படுத்திய போது வெளிநடப்பு செய்தனர். அவர்கள் இரு முகத்தை காட்டுகின்றனர். அகாலி தளம் மட்டுமே விவசாயிகள் பிரச்னையை எழுப்புகின்றது. இன்றைய வெளிநடப்பின் போதும் இதை பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.