2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விவசாயிகள் குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை: ஹர்சிம்ரத் கெளர்

விவசாயிகள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு கவலையில்லை என சிரோமணி அகாலி தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

News image
விவசாயிகள் குறித்து காங்கிரஸுக்கு கவலையில்லை: ஹர்சிம்ரத் கெளர்
Updated On :28 ஜனவரி 2024, 3:43 am

ANI

விவசாயிகள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு கவலையில்லை என சிரோமணி அகாலி தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கெளர் செவ்வாய்க்கிழமை விமரிசித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, இன்று பிற்பகல் வரை நாடாளுமன்றத்திம் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே விவசாயிகள் போராட்டம் குறித்த பதாகைகளுடன் சிரோமணி அகாலி தளத்தின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது ஹர்சிம்ரத் கெளர் பேசியதாவது,

மக்களவையில் விவசாயிகள் பிரச்னை தவிர மற்ற அனைத்து பிரச்னைகளையும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று எழுப்பினர். விவசாயிகள் குறித்த கவலை அவர்களுக்கு இல்லை. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இரு கட்சிகளும் வேளாண் சட்டம் அமல்படுத்திய போது வெளிநடப்பு செய்தனர். அவர்கள் இரு முகத்தை காட்டுகின்றனர். அகாலி தளம் மட்டுமே விவசாயிகள் பிரச்னையை எழுப்புகின்றது. இன்றைய வெளிநடப்பின் போதும் இதை பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.