கரோனா மூன்றாம் அலையை தடுக்க உரிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டுமென முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில்,சில மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தென் மாநிலங்களான கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநில முதல்வர்களுடன் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசியதாவது,
கடந்த சில நாள்களாக மொத்த பாதிப்புகளில் 80 சதவீதம் 6 மாநிலங்களிலிருந்து பதிவாகிறது. அதிக பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள் கரோனா மூன்றாம் அலையை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.
கரோனா அவசர கால நிதியாக மத்திய அரசு ரூ. 23,000 கோடி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியை பயன்படுத்தி மாநிலங்களில் பொது சுகாதாரத்துறை, மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதே சமயம், கிராமப்புறங்களையும் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது
நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

