நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

‘பிரதமர் நேரம் ஒதுக்கினால் சந்திப்பேன்’: மம்தா

பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவரை சந்திப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:38 am

ANI

பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவரை சந்திப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பேசுகையில்,

மாநிலத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளது. ஆகையால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, தில்லி சென்று சில தலைவர்களை சந்திக்கவுள்ளேன். குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவர்களையும் சந்திப்பேன்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்க மூன்று திட்டங்களை அறிவிக்கவுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் கொண்டுவரவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

எங்கள் மாநிலத்திற்கு 14 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றது. ஆனால், 2.12 கோடி கரோனா தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், 18 லட்சம் தடுப்பூசிகளை நாங்கள் வாங்கியுள்ளோம். சில மாநிலங்களுக்கு அதிகளவிலான தடுப்பூசிகள் கிடைக்கின்றது, சில மாநிலங்களுக்கு கிடைப்பதில்லை.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தை பின்பற்றாதது பிரதமருக்கு தெரியும். ஹாத்ராஸ் சம்பவம் போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது, அங்கு எவ்வளவு முறை ஆணையத்தை விசாரணைக்காக அனுப்பியுள்ளார்? மேற்கு வங்கத்திற்கு தவறான பெயரை பெற்று தருகின்றனர். அதிகளவிலான வன்முறைகள் வாக்குப்பதிவுக்கு முன்பே நடைபெற்றவை, ஆனால் வாக்குப் பதிவுக்கு பின்பு எனக் கூறப்படுகிறது.

மனித உரிமைகள் ஆணையம், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்பே வெளியே கூறிவிட்டார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். மேற்கு வங்க மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.