திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

‘பிரதமர் நேரம் ஒதுக்கினால் சந்திப்பேன்’: மம்தா

பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவரை சந்திப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஜூலை 2021, 10:52 am

பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவரை சந்திப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பேசுகையில்,

மாநிலத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளது. ஆகையால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, தில்லி சென்று சில தலைவர்களை சந்திக்கவுள்ளேன். குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் நேரம் ஒதுக்கினால் அவர்களையும் சந்திப்பேன்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்க மூன்று திட்டங்களை அறிவிக்கவுள்ளோம். புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் கொண்டுவரவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

எங்கள் மாநிலத்திற்கு 14 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றது. ஆனால், 2.12 கோடி கரோனா தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், 18 லட்சம் தடுப்பூசிகளை நாங்கள் வாங்கியுள்ளோம். சில மாநிலங்களுக்கு அதிகளவிலான தடுப்பூசிகள் கிடைக்கின்றது, சில மாநிலங்களுக்கு கிடைப்பதில்லை.

மேலும், உத்தரப்பிரதேசத்தில் சட்டத்தை பின்பற்றாதது பிரதமருக்கு தெரியும். ஹாத்ராஸ் சம்பவம் போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது, அங்கு எவ்வளவு முறை ஆணையத்தை விசாரணைக்காக அனுப்பியுள்ளார்? மேற்கு வங்கத்திற்கு தவறான பெயரை பெற்று தருகின்றனர். அதிகளவிலான வன்முறைகள் வாக்குப்பதிவுக்கு முன்பே நடைபெற்றவை, ஆனால் வாக்குப் பதிவுக்கு பின்பு எனக் கூறப்படுகிறது.

மனித உரிமைகள் ஆணையம், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்பே வெளியே கூறிவிட்டார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். மேற்கு வங்க மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.