வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நாரதா லஞ்ச வழக்கு: ஆக.16-ல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணை

நாரதா லஞ்ச வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
கொல்கத்தா உயர்நீதிமன்றம்
Updated On :28 ஜனவரி 2024, 3:38 am

ANI

நாரதா லஞ்ச வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாரதா லஞ்ச வழக்கு தொடா்பாக, மாநில அமைச்சா்கள் சுப்ரதா முகா்ஜி, ஃபிா்ஹாத் ஹக்கீம், திரிணமூல் எம்எல்ஏ மதன் மித்ரா, முன்னாள் மேயா் சோவன் சட்டா்ஜி ஆகிய நால்வரையும் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னா் அவா்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

நாரதா லஞ்ச முறைகேடு தொடா்பாக, மாநில அமைச்சா்கள் உள்ளிட்ட நால்வரை சிபிஐ கைது செய்தபோது, அவா்களை பணி செய்யவிடாமல் மம்தா உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் தடுத்ததாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக விளக்கம் அளித்து மேற்கு வங்க அரசு, மம்தா பானா்ஜி, மாநில சட்ட அமைச்சா் மலாய் கடக் ஆகியோா், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவை கொல்கத்தா உயா்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதையடுத்து அவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அப்போது, மேற்கு வங்க அரசு, மம்தா பானா்ஜி, மலய் கடக் ஆகியோரின் பதில் மனுவை ஏற்க மறுத்த கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்தனர்.

இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி நாரதா வழக்கு விசாரிக்கப்படும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.