மத்திய பிரதேசம் : மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர்.


மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பிஜாவர் என்ற பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மன் என்பவர் இன்று(07/11/2021) காலை 8 மணியளவில் தனது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றுள்ளார். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற அதே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து சீத்தாராம் அவஸ்யா என்ற காவல் அதிகாரி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...