மழை காரணமாக படகிலேயே நடந்த திருமண ஊர்வலம்
பிகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோபர்சிதா கிராமத்தில், படகிலேயே திருமண ஊர்வலம் நடைபெற்றது.


சமஸ்திபூர்: பிகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோபர்சிதா கிராமத்தில், படகிலேயே திருமண ஊர்வலம் நடைபெற்றது.
மணமகள் வீட்டுக்கு, மணமகன் வீட்டார் ஊர்வலமாக வருவது வழக்கம். ஆனால், கிராமமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால், மணமகன் வீட்டார் படகிலேயே ஊர்வலமாக வந்தனர். திருமணம் முடிந்த பிறகும் பாரத் எனப்படும் நிகழ்ச்சியும், அதே படகில்தான் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு மணமக்கள் வீட்டாரும், படகிலேயே சென்று விருந்து சாப்பிட்டனர். இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாகமதி நதியில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்ததன் காரணமாக, கோபர்சிதா கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது.
வெள்ளம் காரணமாக திருமணத்தை தள்ளிப் போட மணமில்லாமல், மூன்று படகுகளை வாடகைக்குப் பிடித்து, திருமண ஏற்பாடுகள் செய்து முடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...