தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்த ஆண்டும் பக்தர்களின்றி புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெறும் என்று ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News image
இந்த ஆண்டும் பக்தர்களின்றி புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை
Updated On :28 ஜனவரி 2024, 3:36 am

ANI


புரி: ஒடிசா மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெறும் என்று ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பேரிடர் காலம் என்பதால், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின்போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் பங்கேற்று ரதத்தை இழுக்கும் கோயில் ஊழியர்களுக்கு கரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிமணி கட்டுரையைப் படிக்க.. மக்களின் காவலன் புரி ஜகந்நாதர்!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை ஜூலை 12ஆம் தேதி பக்தர்களின்றி நடைபெறும். உச்ச நீதிமன்ற மற்றும் ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரை நடைபெறும். ரத யாத்திரையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரத யாத்திரையில் பங்கேற்கும் கோயில் ஊழியர்களும், கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்திக் கொண்டவர்களாகவும், கரோனா இல்லை என்று சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

 காவல்துறையினர் அல்லாமல் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் மற்றும் கோயில் ஊழியர்கள் ரத யாத்திரையில் அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு புரி கோயிலைச் சுற்றி நான்கு இடங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஜூலை 8ஆம் தேதி முதல் நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.