அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளத

News image

உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம்

Updated On :10 ஜூலை 2021, 7:08 am

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் எஸ்ஜிபிஜிஐ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கல்யாண் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவமனை இயக்குர் பேராசிரியர் ஆர்.கே. திமான் தெரிவித்துள்ளார். கல்யாண் சிங்குக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகளை இவர் நாள்தோறும் கண்காணித்து வருகிறார்.

அவர் நல்ல நினைவாற்றலுடன் இருக்கிறார். இதயவியல், நரம்பியல் உள்ளிட்ட பலதுறை மருத்துவ நிபுணர்கள், கல்யாண் சிங்கின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரான கல்யாண் சிங், உடல்நலக் குறைவால் கடந்த 4-ஆம் தேதி லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவா் மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.