மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஆப்கனில் இரட்டைக் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 13 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். 

News image
7 killed in Afghan bomb blasts
Updated On :27 ஜனவரி 2024, 7:23 pm

IANS

ஆப்கானிஸ்தானில் இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். 

தலைநகர் காபூலில் புதன்கிழமை காலை காவலர்களின் வாகனத்தின் மீது மேம்பட்டு வெடிக்கும் சாதனமான(ஐ.இ.டி) குண்டு மூலம் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் இரண்டு காவலர்கள் லேசாகக் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்த குண்டுவெடிப்பு ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச்செய்ய வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பாக காபூல் காவல்துறையின் குற்றவியல் புலனாய்வு துறைக்குழு விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார். 

தெற்கு உருஸ்கான் மாகாணத்தில், செவ்வாய்க்கிழமை இரவு இதேபோன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும்  கொல்லப்பட்டனர். மேலும் ஒரு காவலர் உள்பட பொதுமக்கள் 10 பேர் காயமடைந்ததாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மாகாண தலைநகர் டிரின் கோட் நகரத்தில் காவலர்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தையும் அழித்துள்ளனர். இந்த வாகனத்திலிருந்த காவலர்கள் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. சமீப காலமாக தலிபான் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.