தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

குடியரசு தினம்: இலங்கை பிரதமர் ராஜபட்ச வாழ்த்து

குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:23 pm

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.  

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை பிரதமர் ராஜபட்ச குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்து செய்தியில் அவர், “ இலங்கை மக்களின் சார்பாக நான் இந்தியப் பிரதமர் மற்றும் மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலிலும் வெற்றி பெறட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.