கடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஆக்ரா அருகே முகலாயர் கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு

முகலாயர் காலத்து 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் தண்ணீர் தொட்டியை ஆக்ரா அருகே ஃபதேஹ்புர் சிக்ரியில் இந்திய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

News image
தாஜ் மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு இல்லை
Updated On :27 ஜனவரி 2024, 7:20 pm

IANS


ஆக்ரா: முகலாயர் காலத்து 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் தண்ணீர் தொட்டியை ஆக்ரா அருகே ஃபதேஹ்புர் சிக்ரியில் இந்திய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தொல்லியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டிருக்கும் தோடர்மல் பராதாரி கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகே ஆய்வுப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது இந்த தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாராதரி என்பது காற்றோட்டம் அதிகமாக வருவதற்கு ஏற்ப 12 கதவுகளைக் கொண்ட ஒரு கட்டட அமைப்பாகும்.

இந்திய தொல்லியல் துறையின் ஆக்ரா பகுதி கண்காணிப்பாளர் வசந்த் ஸ்வரங்கர் கூறுகையில், தொல்லியல் ஆய்வின் போது, ஒரு சதுர வடிவிலான தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதன் கூரைப் பகுதி சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது. தண்ணீர்தொட்டியின் சுவர் பகுதிகளும் சுண்ணாம்பு பூச்சால் மூடப்பட்டுள்ளது. பாராதரி கட்டப்பட்டபோதே, இந்த தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாராதரி மற்றும் தற்போது தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியல் மேலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.