புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2.2 லட்சம் முன்களப் பணியாளர்களில் 447 பேருக்கு சிறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது நாளில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நாடு முழுவதும் 2,24,301 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 447 பேருக்கு சிறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர்களில் 3 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தில்லியைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டனர். ஒரு மட்டுமே மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
சிறு உடல் நலப் பிரச்னைகள் என்றால், லேசான காய்ச்சல், தலைவலி, மயக்கம் போன்றவை தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி கூறுகையில், உலகிலேயே இந்தியாவில்தான் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளை விட மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


