கடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு சிறு உடல்நலப் பாதிப்பு

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2.2 லட்சம் முன்களப் பணியாளர்களில் 447 பேருக்கு சிறு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 447 பேருக்கு சிறு உடல்நலப் பாதிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 7:19 pm

IANS


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 2.2 லட்சம் முன்களப் பணியாளர்களில் 447 பேருக்கு சிறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி  16-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாவது நாளில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நாடு முழுவதும் 2,24,301 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்களில் 447 பேருக்கு சிறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர்களில் 3 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் தில்லியைச் சேர்ந்த இரண்டு பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டனர். ஒரு மட்டுமே மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

சிறு உடல் நலப் பிரச்னைகள் என்றால், லேசான காய்ச்சல், தலைவலி, மயக்கம் போன்றவை தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி கூறுகையில், உலகிலேயே இந்தியாவில்தான் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 2,07,229 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளை விட மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.