ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் பனிப்பொழிவு பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

News image
Updated On :6 ஜனவரி 2021, 6:23 am

காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் பனிப்பொழிவு பதிவு செய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

பள்ளத்தாக்கின் சமவெளிகளில் தரையிலிருந்து இரண்டு அடிக்கு மேல் பனி குவிந்துள்ளது, அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் கிட்டத்தட்ட நான்கு அடிக்குப் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து நான்காவது நாளாக மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஸ்ரீநகர் விமான நிலையத்திலும் எந்த விமான போக்குவரத்தும் செயல்படவில்லை. 

பிரதான சலைகளில் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பெரும்பாலான கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

கிராமப்புறங்களில் மின்சாரம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று பிற்பகல் வானிலை ஓரளவு சீரடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சில்லாய் கலன் என்று அழைக்கப்படும் கடுமையான குளிர்காலத்தின் 40 நாள் காலம் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

மேலும், இன்றைய நிலவரப்படி ஸ்ரீநகரில் மைனஸ் 0.9 ஆகவும், பஹல்கம் மைனஸ் 1.2 மற்றும் குல்மார்க் மைனஸ் 3.5 ஆகவும் பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.