ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

குஜராத்தில் ஜன.11 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு 

குஜராத்தில் ஜனவரி 11 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்தது. 

News image
Updated On :6 ஜனவரி 2021, 10:49 am

குஜராத்தில் ஜனவரி 11 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்தது. 

இதைத்தொடர்ந்து தொடக்கப் பள்ளிகள் மற்றும் பிற வகுப்புகள் திறப்பது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா கூறுகையில், 

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளையும், மாநிலத்தில் உள்ள கல்லூரிகளையும் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்பாக கல்வி வல்லுநர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனவரி 11 முதல் கரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் பள்ளி, கல்லூரி திறக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலை, மருத்துவ மற்றும் துணை மருத்துவங்களுக்கான வகுப்புகளும் திறக்கப்படும். மேலும், தற்போது கல்வி நிறுவனங்கள் தொடரும் ஆன்லைன் கல்வியையும் தொடர்ந்து பின்பற்றலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.