எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

இமாசலில் சாலை விபத்தில் பலியான இளைஞரால் மூன்று பேருக்கு மறுவாழ்வு

இமாசலப் பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய 26 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர்.

News image
இமாசலில் சாலை விபத்தில் பலியான இளைஞரால் மூன்று பேருக்கு மறுவாழ்வு
Updated On :27 ஜனவரி 2024, 7:12 pm

IANS


சண்டிகர்: இமாசலப் பிரதேசத்தில் சாலை விபத்தில் சிக்கிய 26 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர்.

விபத்தில் சிக்கி மாரடைப்பால் மரணமடைந்த இளைஞரின் சிறுநீரகம் தானம் அளிக்கப்பட்டதால், மிகவும் கவலைக்கிடமான நிலையிலிருந்த ஒரு நோயாளி, தற்போது மறுவாழ்வு பெற்றுள்ளார்.

காங்ரா மாவட்டம் ஜோகிபூர் கிராமத்தைச் சேர்ந்த பங்கஜ் என்ற இளைஞரின் பெற்றோர், தங்களது பிள்ளை இறந்தபோதும், பலர் மறுவாழ்வு பெறுவார்களே என்ற எண்ணத்தோடு உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்தனர்.

இது குறித்து பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை இயக்குநர் ஜகத்ராம் கூறுகையில், இவர்கள் வெறும் மூன்று பேருக்கு மட்டும் மறுவாழ்வு அளிக்கவில்லை. ஏராளமானோருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளனர் என்று பங்கஜின் குடும்பத்தினருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார். மேலும், பங்கஜ் உயிரிழக்கவில்லை, அவர் தற்போது மூன்று பேரின் உருவில் உயிர் வாழ்கிறார் என்றும் கூறியுள்ளார்.

பங்கஜ் கடந்த டிசம்பர் 28-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். தலையில் படுகாயமடைந்த பங்கஜ் கோமா நிலைக்குச் சென்றார். தொடர் சிகிச்சை அளித்தும் டிசம்பர் 30-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். பொதுவாக மாரடைப்பால் மரணமடைபவர்களின் ஒரு சில உடலுறுப்புகளை மட்டுமே தானமாகப் பெற முடியும். அதுவும் சிக்கலான காரியமாகவே இருக்கும். அதனை பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை மருத்துவர்கள் சவாலாக எடுத்துச் செய்து வருகிறார்கள்.

உடனடியாக அவரது பெற்றோரிடம் பேசி, சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் பெற மருத்துவர்கள் முடிவு செய்தனர். பெற்ற மகனை இழந்த சோகத்திலும் உடல் உறுப்புகளை தானமளிக்க பெற்றோர் ஒப்புக் கொண்டதை அடுத்து, அந்த மருத்துவமனையில் உடல் உறுப்பு செயலிழந்து சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு உடனடியாக உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

ஒரு சிறுநீரகமும், இரண்டு கண்விழிகளும் தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட்டது.

இரண்டு மாதத்தில் மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். இன்று அவனே இல்லை என்று கண்ணீருடன் கூறினார் பங்கஜின் தந்தை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.