பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை

பெங்களூரு மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கியுள்ளது.

News image

பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை

Updated On :4 ஜனவரி 2021, 12:13 pm


பெங்களூரு: பெங்களூரு மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கியுள்ளது.

முதல் ரயில் இன்று காலை 4.45 மணிக்கு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, 5.50 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை வந்தடைந்தது. தினமும் மூன்று ஜோடி ரயில்கள் இவ்விரண்டு தளங்களுக்கும் இடையே இன்று முதல் இயக்கப்படுகிறது.

Story image

பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து வெறும் ரூ.10 மற்றும் ரூ.15ல், இனி பொதுமக்கள் விமான நிலையம் சென்றடையலாம். இதுவரை பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து டேக்ஸி அல்லது வாயு வஜ்ரா பேருந்துகளில் பயணிக்க பெரிய தொகை செலவிட்டு வந்தவர்களுக்கு இது பெரும் நிம்மதியை ஏற்படுத்தும்.

இந்த வழித்தடத்தில் மூன்று ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதில் இரண்டு பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து தேவனஹள்ளி ரயில் நிலையத்துக்கும், ஒன்று ஏலஹன்கா முதல் தேவனஹள்ளி ரயில் நிலையத்துக்கும் இயக்கப்படுகிறது. முதல் ரயில் காலை 4.45 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. கடைசி ரயில் இரவு 9 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏலஹன்கா ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கும், விமான நிலைய ரயில் நிலையத்திலிருந்து ஏலஹன்காவுக்கு காலை 6.15 மணிக்கும் ரயில்கள் புறப்படும்.

Story image

அதேநேரத்தில் ஏற்கனவே கோலார் மற்றும் சிக்பல்லப்பூர் வழியாக இயக்கப்படும் பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் பங்கார்பெட் ரயிலும், மறுமார்க்கத்தில் பங்கார்பெட் முதல் எஸ்வந்த்புருக்கு கோலார் வழியாக இயக்கப்படும் ரயில்களும் இனி பெங்களூரு விமான நிலையத்தில் நின்று செல்லும்.

அதுபோலவே பெங்களுரு கண்டோன்மென்ட் முதல் பங்கார்பெட் வரை இயக்கப்பட்டு, மறுமார்க்கத்தில் பங்கார்பெட் முதல் எஸ்வந்த்பூர் வரை இயக்கப்படும் ரயில்களும் இன்று முதல் விமான நிலையத்தில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.