திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

குஜராத்தில் கார் தீப்பற்றியதில் மூன்று பெண்கள் உடல்கருகி பலி

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் பகுதியில் பருத்தி ஏற்றிவந்த டிரக்குடன் கார் மோதிய வேகத்தில், தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் வந்த 3 பெண்கள் உடல்கருகி பலியாகினர்.

News image

குஜராத்தில் கார் தீப்பற்றியதில் மூன்று பெண்கள் உடல்கருகி பலி

Updated On :2 ஜனவரி 2021, 7:13 am


ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் கோண்டல் பகுதியில் பருத்தி ஏற்றிவந்த டிரக்குடன் கார் மோதிய வேகத்தில், தீப்பற்றி எரிந்தது. இதில் காரில் வந்த 3 பெண்கள் உடல்கருகி பலியாகினர்.

இந்த கோர விபத்து கோண்டல் - ராஜ்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பிலியாலா கிராமத்துக்கு அருகே காலை 6 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக கோண்டல் தாலுகா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று பெண்களுடன் வந்து கொண்டிருந்த காரும், பருத்தி ஏற்றி வந்த டிரக்கும் மோதிக் கொண்டதில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தது. காரில் தீப்பற்றியதும் மூன்று பெண்களாலும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதால், மூவரும் எரிந்து பலியாகினர். கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்த தீயைக் கட்டுப்படுத்தினர்.

உயிரிழந்தவர்கள் ரேகா ஜடேஜா (62), ராஸிக் ராய்ஜடா (80), முகுந்த்பா ராய்ஜடா (45) ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.