கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தில் 22 பேருக்கு கரோனா

ஒரு பக்கம் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அதிதீவிர கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவது பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தில் 22 பேருக்கு கரோனா

Updated On :2 ஜனவரி 2021, 5:25 am


ஹைதராபாத்: ஒரு பக்கம் கரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், அதிதீவிர கரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவது பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானாவின் சூர்யாபெட் நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 22 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு, இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூர்யாபெட் நகரில் ஏராளமான குடியிருப்புகள் அடங்கிய ஒரே வளாகத்தில் இவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் யாருக்குமே கரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனைவருமே வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கில் பங்கேற்றுத் திரும்பிய ஒருவருக்கு ஏற்கனவே காசநோய் இருந்து அதற்கான பரிசோதனைக்கு வந்த போது, அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் 38 பேரும் தனிமைப்பட்டு அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இவ்வாறு ஒரே குடும்பத்தில் இவ்வளவு அதிகம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வெளிநாடு சென்று வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.