தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தெலங்கானா: மார்ச் 1 முதல் 55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தெலங்கானாவில் மார்ச் 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசியின் கீழ் 55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

News image
தெலங்கானா: மார்ச் 1 முதல் 55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated On :27 ஜனவரி 2024, 7:36 pm

IANS

தெலங்கானாவில் மார்ச் 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசியின் கீழ் 55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில சுகாதார அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் 45 வயதைக் கடந்த இணைநோய்கள் உள்ளோருக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட 45 லட்சம் பேரும், 45-60 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 10 லட்சம் பேரும் மாநிலத்தில் இணை நோயுற்றவர்களாக இருப்பதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றன. 

எனவே, இதை இரு குழுக்களாக உள்ளடக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 1,500 மையங்களை அமைக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

தெலங்கானாவில் தற்போது ஆறு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாள்களில் மேலும் 10 லட்சம் பெற உள்ளதாகவும்  சுகாதாரத் துறை எதிர்பார்க்கிறது.

இந்த தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரோக்கியஸ்ரீ அறக்கட்டளையுடன் தொடர்புடைய 230 தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 1,000 ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கும் தடுப்பூசிக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.