தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது: பிகார் அரசு மீது அதிருப்தி

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பாஸ்தி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது.

News image
புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது: பிகார் அரசு மீது அதிருப்தி (கோப்புப் படம்)
Updated On :27 ஜனவரி 2024, 7:35 pm

IANS


பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பாஸ்தி கிராமத்தில் கட்டப்பட்ட புதிய தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது.

முதல்வர் நிதிஷ் குமாரின் தொகுதிக்கு உள்பட்ட நலந்தா மாவட்டம் நர்நௌத் பகுதியில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி, கட்டப்பட்டபோதே, தரமற்ற கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்று அது இடிந்து விழுந்துள்ளது.

தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது குறித்து பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறையின் இளம் பொறியாளர் அபே சிங் கூறுகையில், சில சமூக விரோதிகள் தண்ணீர்தொட்டியின் முக்கிய இணைப்புகளைக் கழற்றிவிட்டதே இடிந்து விழக் காரணம் என்று கூறியுள்ளார்.

அதேவேளையில், ஹர்நௌத் பகுதியில் மட்டும் முதாரி, சிலா மற்றும் அதனையொட்டியுள்ள சில கிராமங்களிலும் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகள் இடிந்து விழுந்ததையும் அபே ஒப்புக் கொண்டுள்ளார்.

முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தண்ணீர்தொட்டிகள் இப்படி கட்டப்பட்டு சில மாதங்களிலேயே இடிந்து விழுவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.