தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ம.பி.யில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகியுள்ளனர். 

News image
NDRF team carries out rescue operation after an overcrowded bus plunged into a canal in Sidhi district of Madhya Pradesh.
Updated On :27 ஜனவரி 2024, 7:32 pm

IANS


மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் பலியாகியுள்ளனர். 

சீதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்துள்ளது. 

Story image

முதற்கட்டமாக கரையிலிருந்த 7 பேரை உயிருடன் மீட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட 30 பேரை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துளசிராம் சிலாவத் உறுதிப்படுத்தியுள்ளார். 

பன்சாகர் அணையிலிருந்து வெளிவரும் பிரதான கால்வாயில், சுமார் 30 அடி ஆழத்திலும் இருக்கும் ஷரதா கால்வாயில் பேருந்து விழுந்துள்ளது. எனவே, நீரில் பேருந்து முழுவதுமாக மூழ்கியுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ திவாரி கூறியுள்ளார். 

மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக கிரேன்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.