டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பஞ்சாப் அருகே, பாகிஸ்தான் எல்லையில் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பஞ்சாப் மாநிலத்துக்கு அருகே அத்துமீறி பறந்து கொண்டிருந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

News image

பஞ்சாப் அருகே, பாகிஸ்தான் எல்லையில் டிரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை

Updated On :18 டிசம்பர் 2021, 9:26 am


புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பஞ்சாப் மாநிலத்துக்கு அருகே அத்துமீறி பறந்து கொண்டிருந்த டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் செக்டார் அருகே பறந்து கொண்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கருப்பு நிறத்தில் ஒரு பொருள் சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து 300 மீட்டர் தொலைவிலும், எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் வேலியிலிருந்து 150 மீட்டர் தொலைவிலும் பறந்து கொண்டிருப்பத எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன், ஹெக்ஸா காப்பரால் செய்யப்பட்ட 4 பேட்டரிகளுடன் இயங்கும் வகையில், 23 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இது சுமார் 10 கிலோ எடை கொண்ட பொருளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் டிரோன் பறந்த இடத்தில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.