டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்படும்: அகிலேஷ் யாதவ்

லக்கிம்பூர் கேரி வன்முறையை, ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

News image

தேர்தல்களில் பாஜக தோற்கடிக்கப்படும்: அகிலேஷ் யாதவ்

Updated On :18 டிசம்பர் 2021, 9:41 am


ரே பரேலி: லக்கிம்பூர் கேரி வன்முறையை, ஜாலியன்வாலாபாக் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரிட்டீஷார் கூட முன்னாலிருந்துதான் சுட்டனர், ஆனால் பாஜக, பின்னாலிருந்து ஜீப்பை ஏற்றிக் கொன்றது என்று கூறியுள்ளார்.

சமாஜ்வாதி வெற்றி யாத்திரையின் ஒரு பகுதியாக, ரே பரேலி சென்றிருக்கும் அகிலேஷ் யாதவ், வரும் 2022ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி படுகொலை நடந்துள்ளது. ஒரு முறை வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், நமக்கு ஜாலியன்வாலாபாக் படுகொலை நினைவுக்கு வரும், அப்போது, முன்னால் நின்றுகொண்டு, பிரிட்டீஷார் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். 

ஆனால், பாஜகவோ, விவசாயிகளின் பின்னாலிருந்து ஜீப்பை மோதவிட்டுள்ளது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.