டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

புது தில்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: அனைவரும்?

புது தில்லியில், மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image

சத்யேந்தர் ஜெயின்

Updated On :14 டிசம்பர் 2021, 9:08 am


புது தில்லி: புது தில்லியில், மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நான்கு பேருமே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், புது தில்லியில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்திருப்பதாகவும், அவர்களில் ஒருவர் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாகவும் கூறினார். மற்ற ஐந்து பேரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், புது தில்லியில், ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை சமூகப் பரவலாக மாறவில்லை. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்து, ஒமைக்ரான் சந்தேகத்தின் அடிப்படையில், 74 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.