பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கர்நாடகத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: மருத்துவ நிபுணர்

மாநிலத்துக்குள் மூன்றாம் அலை நுழையக் கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று மாநில கரோனா நிபுணர் குழு தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

News image

கர்நாடகத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: மருத்துவ நிபுணர்

Updated On :25 ஆகஸ்ட் 2021, 12:17 pm


பெங்களூரு: மூன்றாவது அலை தாக்கினால் அது கர்நாடகத்தை எப்படி பாதிக்கும் என்பதை சொல்ல முடியவில்லை, மாநிலத்துக்குள் மூன்றாம் அலை நுழையக் கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று மாநில கரோனா நிபுணர் குழு தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இன்று கர்நாடக முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மருத்துவர் தேவி ஷெட்டி, கரோனா மூன்றாம் அலை குறித்த ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளோம். கரோனா மூன்றாம் அலை மாநிலத்தை அக்டோபர் மாதத்தில் தாக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும், கரோனா மூன்றாம் மாநிலத்துக்குள் வரக் கூடாது என்று பிரார்த்தனை செய்வோம். எனினும் அது வந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த கேள்விக்கு, மாநில அரசு சரியான வழியிலேயே செயல்படுகிறது என்று கூறினார்.

மேலும், மத நிகழ்ச்சிகளுக்காக மக்கள் ஒன்றுகூட வேண்டாம். மக்கள்தான் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் பொறுப்பற்று செயல்பட்டால், பிறகு தடுப்பூசி கூட பலனளிக்காது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.