தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கரோனா பேரிடர்: யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளர்

ராஜஸ்தானில் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளரின் செயல் அனைவரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளர்
Updated On :28 ஜனவரி 2024, 3:56 am

IANS

ராஜஸ்தானில் வளர்ப்பு யானைகளுக்கு உணவளிக்க நகைகளை அடமானம் வைத்த உரிமையாளரின் செயல் அனைவரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சுற்றுலாத் துறை முடங்கியுள்ளது. சுற்றுலாத் துறைகளை நம்பி இருக்கும் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெய்ப்பூர் அருகே ஹாத்திகோன் என்ற கிராமத்தில் 86 வளர்ப்பு யானைகள் உள்ளன. கரோனா பேரிடர் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்ததால் தங்களது வளர்ப்பு யானைகளுக்கு உணவு வாங்க பணம் இல்லாமல் உரிமையாளர்கள் அனைவரும் சிரமத்தில் உள்ளனர்.

8 யானைகளின் உரிமையாளரான சோயப் கூறுகையில், “எப்போதும் ஒன்று அல்லது இரண்டு யானைகள் சவாரிக்கு செல்லும். ஒரு சவாரிக்கு ரூ. 1,100 வசூலிக்கப்படும். ஆனால், அந்த தொகையானது, யானைகளின் உணவுகளுக்கே சரியாக இருக்கும். இந்த வருமானம் தற்போது தடைபட்டுள்ளதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.”

3 யானைகளின் உரிமையாளரான ஆசிஃப் கூறுகையில், “யானைகளை பராமரிக்க நாளொன்றுக்கு ரூ. 2,500 முதல் ரூ. 3,000 வரை செலவாகின்றன. மாநில அரசு அளிக்கும் நிவாரணம் போதுமானதாக இல்லை.

எங்கள் கிராமத்திலிருந்து அம்பெர் சுற்றுலாத் தலத்திற்கு சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 30 யானைகள் செல்லும். ஆனால், தற்போது சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு யாரும் வருவதில்லை. 

அனைத்து யானைகளும் சத்தாண உணவுகளை சப்பிட்டு வருகின்றன. வரும் காலங்களிலும் சத்தாண உணவே வழங்கப்படும். எங்கள் வீடுகளில் உள்ள நகைகளை அடமானம் வைத்து யானைகளுக்கு உணவளிக்கப்பட்டு வருகின்றோம். யானைகளை எங்கள் குடும்ப உறுப்பினராக தான் பார்க்கின்றோம்.” 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.