பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தாணே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

தாணே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் பலி

Updated On :28 ஏப்ரல் 2021, 7:05 am

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடந்த 5 நாள்களுக்கு முன்னதாக பால்கர் மாவட்டத்தில் விராரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இதையடுத்து இன்று இந்த தீ விபத்து சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. 

கௌசா-மும்ப்ரா பகுதியில் பிரைம் கிரிடிகேர் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோயாளிகள் யாரும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 

3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 5 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 20 நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தீ விபத்துக்கான காரணத்தை அறிய உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.