/

மகாராஷ்டிரம் மருத்துவமனையில் தீ விபத்து: குடியரசுத் தலைவர் இரங்கல்

மகாராஷ்டிரத்தின் பால்கர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image

மகாராஷ்டிரம் மருத்துவமனையில் தீ விபத்து: குடியரசுத் தலைவர் இரங்கல்

Updated On :23 ஏப்ரல் 2021, 6:52 am

மகாராஷ்டிரத்தின் பால்கர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவரது சுட்டுரை பதிவில், 

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென தீ விபத்தில் ஏற்பட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 

இந்த விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்றார். 

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்த கரோனா நோயாளிகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

மேலும், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷவர்தன், ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.