இந்தியாவில் 96 நாள்களில் இதுவரை 13.23 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
கரோனாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை வரை, 19,28,118 முகாம்களில் 13,23,30,644 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் சுமாா் 22 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில், கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா் கரோனா முன்களப் பணியாளா்களுக்கு பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும், இணை நோய் தாக்கம் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை இதுவரை13 கோடியைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியா 96 நாள்களில் 13.23 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி, உலகிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்தும் நாடு என்ற நிலையை எட்டியிருக்கிறது.
நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதத்தில், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், கா்நாடகம், கேரளம் உள்பட 10 மாநிலங்களில் மட்டும் 75.66 சதவீதத்தைக் கொண்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,78,841 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 1,34,54,880 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


