பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

உத்தரகண்டில் 67 சுகாதார ஊழியர்களுக்கு கரோனா

உத்தரகண்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், 67 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவ சுகாதாரத்துறை இயக்குநர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 10:16 am

உத்தரகண்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர் உள்பட 67 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவ சுகாதாரத்துறை இயக்குநர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

டெஹ்ராடூன், தெஹ்ரி, ஹரித்வார், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 67 சுகாதார ஊழியர்கள் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் உத்தரகண்ட் மாநில செயலகத்தில் மக்கள் நுழைவதைத் தடை செய்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் செயலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். 

பத்திரிகையாளர்களும் செயலகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் உள்ள டெஹ்ராடூன், நைனிடால், ஹரித்வார், உதம் சிங் நகர் மற்றும் கோத்வார் பாபர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் ஏப்ரல் 30 வரை மூடப்பட்டுள்ளது. 

டெஹ்ராடூன் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும், மீதமுள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கரோனா தொற்றின் அடிப்படையில் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் தொடரப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார். 

மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, உத்தரகண்டில் தற்போது 12,484 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.