கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து கோவா அரசு இதுவரை யோசிக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சாவந்த்..
கோவாவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 24 முதல் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
மாணவர்கள் தேர்வு அறைக்கு வந்து பாதுகாப்பாக தேர்வெழுத அனைத்துவித முன்னேற்பாடுகளும் நடத்தி வருகிறோம். மேலும், பிற வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கரோனா தொற்றுக்கு மத்தியில் பொதுத்தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முறையான சமூக இடைவெளியைப் பயன்படுத்தி ஒரு வகுப்புக்கு 11 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்தாண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கான தேர்வுகளை ரத்து செய்தும், 12-ஆம் வகுப்புக்கான தேர்வை ஒத்தி வைத்துள்ளது.
கரோனா காரணமாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் பொதுத்தேர்வு ஒத்தி வைத்துள்ளனர். ஆனால், திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்துவதாகக் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி கோவாவில் 473 புதிய பாதிப்பும், நால்வரும் உயிரிழந்தனர். இதன் மூலம், மாநிலத்தில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 63,815ஐ எட்டியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, பலி எண்ணிக்கை 857 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


