2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வாராணசிக்கு வரும் பக்தர்களுக்கு புதிய நிபந்தனை

வாராணசிக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 72 மணி நேரத்துக்குள் ஆர்டி-பிசிஆர் சோதனை எடுத்திருப்பது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:01 pm

IANS

வாராணசிக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 72 மணி நேரத்துக்குள் ஆர்டி-பிசிஆர் சோதனை எடுத்திருப்பது கட்டாயம் என்று மாவட்ட நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. 

கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதையடுத்து, புனித நகருக்கு வருவதைத் தவிர்க்குமாறு நாடு முழுவதும் உள்ள யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அன்னபூரணா கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற தலங்களுக்கு வரும் பக்தர்கள் ஆர்டி-பிசிஆர் சோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று நிபந்தனை விதித்துள்ளது. 

தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் காசிக்கு வருவதைப் பக்தர்கள் தவிர்க்குமாறு யாத்ரீகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மற்ற நகரங்களைச் சேர்ந்தவர்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் நகரத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

வாராணசியில் ஏற்கெனவே இரவு ஊரடங்கு விதித்துள்ள நிலையில், தற்போது மாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை கங்கா நதிக்கரைக்கு  வருவதற்கு பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது. 

கடந்த 10 நாள்களில் அதிகபட்ச கரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.