அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே அளிக்கும் விளக்கம்

அச்சம் கொள்ளத் தேவையில்லை என ரயில் நிலையங்களில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

News image

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே அளிக்கும் விளக்கம்

Updated On :14 ஏப்ரல் 2021, 7:07 am


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து, பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சம் கொள்ளத் தேவையில்லை என ரயில் நிலையங்களில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

144 தடை உத்தரவு உள்பல பல்வேறு கட்டுப்பாடுகள் பிறக்கப்பட்டிருப்பதால், விரைவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில், மகாராஷ்டிர மாநிலம் லோகமானிய திலகர் ரயில் நிலையத்தில் நெடுந்தொலைவு செல்லும் ரயில்களில் ஏற ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில், மத்திய ரயில்வே வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக குவிய வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காமல் காணப்படும் மக்கள் கூட்டத்தை நெறிப்படுத்த மத்திய ரயில்வே காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரத்தின் துவக்கம் முதலே மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் முக்கிய ரயில் நிலையங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் சொந்த ஊர்களுக்கு ரயிலேற கூட்டம் கூட்டமாக வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.